கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு!

 

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். ஆனால் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசு பள்ளிகளும் ரயில்களும் தனிமைபடுத்தப்படும் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 

ttn

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய பலர், சிகிச்சை பெற்று வரும் நிலையில் அப்துல் ரகுமான் என்ற நபரும் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், சிதம்பரம் அரசு முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளார்.