கொரோனா முடியவில்லை… எச்சரிக்கையாக இருங்கள்! – திருச்சி சிவா அட்வைஸ்

 

கொரோனா முடியவில்லை… எச்சரிக்கையாக இருங்கள்! – திருச்சி சிவா அட்வைஸ்

கொரோனா பரவல் முடிந்துவிட்டது, இனி பாதிப்பு இல்லை என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் அது அப்படியேதான் உள்ளது. வெளியே செல்லும் நண்பர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று திருச்சி சிவா எச்சரக்கைவிடுத்துள்ளார்.

கொரோனா பரவல் முடிந்துவிட்டது, இனி பாதிப்பு இல்லை என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் அது அப்படியேதான் உள்ளது. வெளியே செல்லும் நண்பர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று திருச்சி சிவா எச்சரக்கைவிடுத்துள்ளார்.

corona-in-tamilnadu-67

தி.மு.க எம்பி திருச்சி சிவா தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியுள்ள தகவலில், “கொரோனா நோய்த் தொற்று இன்னும் முடியவில்லை, எனவே நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பலரும் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் கொரோனா நோய்த் தொற்று முடிந்துவிட்டது என்று கருதுகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக சில தளர்வுகள் அளிக்கப்படுகிறதே தவிர, கொரோனா தொற்று அப்படியேதான் உள்ளது. எனவே, வேலைக்காக வெளியே செல்லும் நண்பர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். கவனக்குறைவாக, அசட்டையாக இருந்துவிடாதீர்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் – திருச்சி சிவா” என்று கூறியுள்ளார்.