கொரோனா மாஸ்க் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை போலீசார்!

 

கொரோனா மாஸ்க் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை போலீசார்!

தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  35லிருந்து 38ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  35லிருந்து 38ஆக உயர்ந்துள்ளது. 

ttn

இந்நிலையில் சென்னையில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றி வருபவர்களை பிடித்து போலீசார் நூதன முறையில் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அதாவது கொரோனா வைரஸ் போன்ற மாஸ்க் அணிந்துள்ள போலீசார்  கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.