‘கொரோனா’ போல கொல்லும் காதல் தோல்வி – முன்னாள் மந்திரியின் உறவுப்பெண்ணால் உயிரை விட்ட காதலன்..

 

‘கொரோனா’ போல கொல்லும் காதல் தோல்வி – முன்னாள் மந்திரியின் உறவுப்பெண்ணால் உயிரை விட்ட காதலன்..

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வது இப்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது என்றால் அது மிகையாகாது .சில பெண்கள் டைம் பாஸ்க்கு காதல் செய்து விட்டு அப்புறம் எங்க வீட்ல சம்மதிக்கமாட்டறாங்கன்னு சொல்லி வீட்ல பார்த்த அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொண்டு  போய் விடுவார்கள்.

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வது இப்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது என்றால் அது மிகையாகாது .சில பெண்கள் டைம் பாஸ்க்கு காதல் செய்து விட்டு அப்புறம் எங்க வீட்ல சம்மதிக்கமாட்டறாங்கன்னு சொல்லி வீட்ல பார்த்த அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொண்டு  போய் விடுவார்கள். ஆனால் ஆண்கள் காதல் முருகன் போலவோ இல்லை தற்கொலை செய்து கொண்டோ இறந்து போகிறார்கள்.
இப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. மாண்டியா மாவட்டத்திலுள்ள அர்ச்சகனஹள்ளி பகுதியில் சனிக்கிழமை ஒரு இளைஞர் தனது காதலிக்கு வேறொரு இடத்தில நிச்சயதார்த்தம் நடந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது 
தர்ஷன் என்ற 28 வயது வாலிபர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவுப்பெண்ணை காதலித்து வந்தார் .அவர் பணத்தில் இவரை விட வசதியானவர் என்பதால் இவருக்கு அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க பெண் வீட்டில் சம்மதிக்காமல், அவருக்கு வேறொரு பணக்கார இடத்தில நிச்சயம் செய்தனர். இதற்கிடையில் அவர் அந்த பெண்ணை சந்தித்து பேசியுள்ளார், அதனால் பெண் வீட்டில் தர்ஷனை பலமுறை எச்சரித்துள்ளனர் .
இதனால் மனம் நொந்த தர்ஷன் சனியன்று வீட்டில் தூக்குமாட்டி இறந்ததாக கூறப்படுகிறது .ஆனால் தர்ஷன் தரப்பிலோ காதலியின் குடும்பத்தினர் அவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்  சாட்டுகின்றனர் .இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் ..