கொரோனா பீதி! பஞ்சாப்பில் காணாமல்போன 335 பேர்!!

 

கொரோனா பீதி! பஞ்சாப்பில் காணாமல்போன 335 பேர்!!

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தது மக்களை இன்னும் பீதி அடையச் செய்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் கேரளா, டெல்லி, மணிப்பூரை தொடர்ந்து மேலும் 4 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

coronavirus

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 31ம் தேதி வரை பஞ்சாபில் உள்ள அனைத்து திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் மூடப்படுவதாக பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மாநிலத்தில் விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணித்திருந்த 335 பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பஞ்சாப் அரசு கூறியுள்ளது.