கொரோனா பீதி: டெல்லியில் கோமியம் பார்ட்டி நடத்திய இந்து மகா சபா!

 

கொரோனா பீதி: டெல்லியில் கோமியம் பார்ட்டி நடத்திய இந்து மகா சபா!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரானாவில் இருந்து தப்பிக்க கோமியம் அருந்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆர்.எஸ்.எஸ் மாநாடு ரத்து செய்யப்பட்டது தொடங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது வரை என்று நாடா பீதியில் உள்ளது. 

delhi

இந்த நிலையில் அகில இந்திய இந்து மகா சபை சார்பில் டெல்லியில் கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீர் அருந்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பசுவின் கோமியத்தை அருந்தினர்.

delhi

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓம் பிரகாஷ் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் 21 ஆண்டுகளாக மாட்டின் சிறுநீரை அருந்தி வருகிறோம். பசுஞ்சாணத்தில் குளிப்போம்.

எங்களுக்கு எந்த நோயும் வந்தது இல்லை. நாங்கள் ஆங்கில மருத்துவர்களை சந்தித்ததே இல்லை” என்றார்.