கொரோனா பீதியால் சட்டமன்றத்திற்கு மாஸ்க் அணிந்து வந்த திமுக எம்.எல். ஏ!
Mar 9, 2020, 10:06 IST1583728605000
முன்னாள் எம்எல்ஏ ப.சந்திரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் பேரவை ஒத்தி வைக்கப்படும்
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காகத் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
காலை 10 மணியளவில் கூடிய இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான க.அன்பழகன், எம்எல்ஏ காத்தவராயன், கே.பி.பி.சாமி, முன்னாள் எம்எல்ஏ ப.சந்திரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கைகளை சுத்தம் செய்யும் ஹேண்ட் வாஷ் கொடுக்கப்பட்டு, விழிப்புணர்வு அறிக்கைகளும் கொடுக்கப்பட்டன . மேலும் திமுக எம்.எல்.ஏ., சரவணன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்க் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.