கொரோனா பாதிப்பு விளைவு: சி.ஏ தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைப்பு

 

கொரோனா பாதிப்பு விளைவு: சி.ஏ தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைப்பு

கொரோனா பாதிப்பு விளைவால் சி.ஏ தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: கொரோனா பாதிப்பு விளைவால் சி.ஏ தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 66 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக பல தேர்வுகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதனால் அவை நடக்கும் தேதிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ttn

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சி.ஏ தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 2-ஆம் தேதி முதல் முதல் 18-ஆம் தேதி வரை அத்தேர்வுகள் நடைபெறவிருந்தது. இதையடுத்து சி.ஏ தேர்வுகள் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை நடக்கும் என்று ஒத்திவைத்து ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது.