கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஜி.கே. வாசன் ரூ.10லட்சம் நிதியுதவி!

 

கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஜி.கே. வாசன் ரூ.10லட்சம் நிதியுதவி!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார்.

statement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடை தாருங்கள் என கேட்டுகொண்டுள்ளார்கள். இதனை தமாகா சார்பில் மனதார வரவேற்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாமா சார்பில் ரூ. 10 லட்சம் அனுப்பப்படுகிறது. தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, கொரோனா வைரஸ் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து துறையினரும் நிதி வழங்க முன்வரவேண்டும் என தமாகா சார்பில் கேர்ருக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.