கொரோனா பாதிப்பு : காணொளி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

 

கொரோனா பாதிப்பு : காணொளி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இதனைத்  தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனிடையே ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அரசு காவல்துறைக்கு அறிவுறுத்தியது. அதன் படி, ஆயிரக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

ttn

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கையையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது குறித்து முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி, தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.