கொரோனா பாதிப்பு: ஒரே கும்பத்தை சேர்ந்த 84 வயது பாட்டி உட்பட மூன்று பேர் டிஸ்சார்ஜ்!

 

கொரோனா பாதிப்பு: ஒரே கும்பத்தை சேர்ந்த 84 வயது பாட்டி உட்பட மூன்று பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனாவில் இருந்து இதுவரை 20க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், முதியவர்களும் அதிக அளவில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார். 

ttn

அதனைத்தொடர்ந்து இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார். அந்த மூதாட்டியின் குடும்பத்தை சேர்ந்த 54 வயது பெண் , 25 வயது இளைஞர் ஆகியோரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களும் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.