கொரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் பலி!
Mar 10, 2020, 10:54 IST1583817856000
கைகுலுக்குவதோ, முத்தமிடுவதோ கூடாது என்றும் கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 67 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க,அதிகளவில் மக்கள் கூடாமல் இருக்க வேண்டும் என்றும் கைகுலுக்குவதோ, முத்தமிடுவதோ கூடாது என்றும் கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸுக்கு மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,136 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கொரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் இதுவரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.