கொரோனா பாதித்த நபருடன் திருமணத்தில் கலந்து கொண்ட கேரள அமைச்சர்கள்

 

கொரோனா பாதித்த நபருடன் திருமணத்தில் கலந்து கொண்ட கேரள அமைச்சர்கள்

கொரோனா பாதித்த நபருடன் 2 கேரள அமைச்சர்கள் துபாயில் திருமணத்தில் கலந்து கொண்டதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.

கொச்சி: கொரோனா பாதித்த நபருடன் 2 கேரள அமைச்சர்கள் துபாயில் திருமணத்தில் கலந்து கொண்டதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த நபருடன் 2 கேரள அமைச்சர்கள் துபாயில் திருமணத்தில் கலந்து கொண்டதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.

ttn

நெல்லிகுன்னு மற்றும் எம்.சி.கம்ருதீன் ஆகிய இரு அமைச்சர்களும் சமீபத்தில் துபாயில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுடன் ஒரு நபர் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அமைச்சர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இதையடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.