கொரோனா பாதித்து குணமடைந்தவரை வீட்டிற்கு அழைத்துவர எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! செத்துவிட்டதா மனிதம் ?

 

கொரோனா பாதித்து குணமடைந்தவரை வீட்டிற்கு அழைத்துவர எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! செத்துவிட்டதா மனிதம் ?

கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. பழனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடுதிரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடந்துள்ளது

கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. பழனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடுதிரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடந்துள்ளது

பழனி பகுதியில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடுகளை சுற்றிய பகுதிகள் முழுவதும் தனிமை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூரில் சிகிச்சை பெற்றுவந்த பழனி அண்ணாநகரை சேர்ந்த  நபர் ஒருவர்  சிகிச்சை முடிந்து நேற்று மீண்டும் பழனிக்கு திரும்பினார். தகவலறிந்து அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நபருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை நேற்றிரவு பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்துக்கொள்வதாக கூறி மருத்துவமனையில் தங்க வைத்தனர்.

protest

இந்நிலையில் பழனி சார் ஆட்சியர் உமா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, டிஎஸ்பி விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் அண்ணாநகர் பகுதி மக்களுடன் இன்றுகாலை பேச்சுவார்த்தை நடத்தினர். குணமாகியுள்ள நபரால் கொரோனா தொற்று பரவாது என்றும், வீட்டிற்கு வந்தாலும் இன்னும் சில வாரங்கள் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார் என கூறினர். இதனையடுத்து குணமடைந்த நபரை அவரது வீட்டிற்கு வர பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.