கொரோனா பரவல் காரணமாக பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு
Apr 9, 2020, 14:59 IST1586424583000
கொரோனா பரவல் காரணமாக பொறியியல் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா பரவல் காரணமாக பொறியியல் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பொறியியல் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.