கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு – முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

 

கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு – முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

தமிழக முதல்வரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்க தமிழக தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக முதல்வரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்க தமிழக தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. இதுவரை 1629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 662 பேர் கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுநோய்க்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உட்பட பல துறையை சேர்ந்தவர்கள் கொரோனாவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tamilnadu Chief Minister

கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்க தமிழக தலைவர் சி.என்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார். முதல்வரை காணொளி மூலம் சந்தித்த அவர் தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பேசினார்.