கொரோனா பணக்காரர்களுக்கான நோய்! அதனால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுலாம் கிடையாது- முதலமைச்சர் பழனிசாமி

 

கொரோனா பணக்காரர்களுக்கான நோய்! அதனால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுலாம் கிடையாது- முதலமைச்சர் பழனிசாமி

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 36 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 36 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை 1242 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

coronavirus

இந்நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், கொரோனா ஏழைகளைப் பாதிக்காது- பணக்காரர்களுக்கான நோய். வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்தனர். ஏழைக்கு எங்கு கொரோனா வைரஸ் வந்தது? தமிழகத்தில் உருவாகவில்லை” என தெரிவித்தார்.