கொரோனா நிவாரண உதவி தொகை வழங்குவதில் யார் உசத்தி! ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல்! விஜய் ரசிகர் உயிரிழப்பு!!

 

கொரோனா நிவாரண உதவி தொகை வழங்குவதில் யார் உசத்தி! ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல்! விஜய் ரசிகர் உயிரிழப்பு!!

மரக்காணத்தில் கொரோனா நிவாரண உதவி தொகை குறித்து ரஜினி விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விஜய் ரசிகரான யுவராஜ் உயிரிழந்தார். 
  

விளையாட்டு வினையாகும் என்பது போன்று ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு யுவராஜியை கையால் பலமாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். அப்போது தலையில் படுகாயம் அடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிபாதாபமாக இறந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல்கொடுத்துள்ளனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து யுவராஜியை அடித்துகொலை செய்த தினேஷ்பாபுவை கைது செய்து மேற்கொண்டு விசாரனை நடத்திவருகின்றனர் 

Murder

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ்[22] கூலி தொழிலாளி. இவர் விஜய் ரசிகர் ஆவார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஆறுமுகம் சமையல் தொழிலாளி. இவரது மகன் தினேஷ்பாபு[22]. இவர் ரஜினி ரசிகர் ஆவார். இவர்கள் இரண்டுபேரும் நண்பர்கள். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிகம் பணம்கொடுத்தது, ரஜினியா, விஜயா என்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.