கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடியை வழங்கும் தி.மு.க.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்கள் உதவும்படி மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகின்றனர். இதற்கு முன்னதாகவே தி.மு.க எம்.பி-க்கள் தங்கள் சம்பளம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கி வந்தனர்.
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிக்காக ரூ.1 கோடியை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக தி.மு.க அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்கள் உதவும்படி மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகின்றனர். இதற்கு முன்னதாகவே தி.மு.க எம்.பி-க்கள் தங்கள் சம்பளம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கி வந்தனர்.
‘கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி, கொரோனா முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மருத்துவ மேம்பாட்டுப் பணிகளுக்காக, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திரு. @dmk_raja MP அவர்கள் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு’#DMKagainstCorona pic.twitter.com/YDRlnS7eyE
— DMK (@arivalayam) March 29, 2020
தற்போது தி.மு.க சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பல கோடிகளை அறிவித்து வரும் நிலையில் தி.மு.க வெறும் 1 கோடி ரூபாய் அறிவித்திருப்பதாக அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
முதலமைச்சருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதோடு நிற்கவில்லை, பொது மக்களுக்கு உதவிகள் செய்திட அன்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் என்று தி.மு.க இளைஞரணி அறிவித்துள்ளது. இதன் மூலம் பலருக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்று தி.மு.க-வினர் கூறுகின்றனர்.
“கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.#DMK #DMKagainstCorona pic.twitter.com/3Msf4BXDLA
— DMK (@arivalayam) March 30, 2020