கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் வீட்டில் இருந்த தந்தை உயிரிழப்பு!
மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 5,262 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 5,262 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநின்றவூர் கோமதிபுரத்தில் 67 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு கொரோனா இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவரை சிகிச்சைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் 90 வயது தந்தை உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயியுள்ளனர். முதியவருடன் கொரோனா பாதித்த நபரும் மன நலம் பாதித்த அவரது 15 வயது மகளும் உள்ள நிலையில் இறந்த முதியவரின் இறுதி சடங்கிற்கு கூட உறவினர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.