கொரோனா தொற்றுள்ள நிருபர்களுக்கு உதவிய டி.டி.வி.தினகரன்! பத்திரிகையாளர்கள் நன்றி

 

கொரோனா தொற்றுள்ள நிருபர்களுக்கு உதவிய டி.டி.வி.தினகரன்! பத்திரிகையாளர்கள் நன்றி

தமிழகத்தில் ஊரடங்கு உள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்களுடன் பத்திரிகையாளர்களும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல இடங்களுக்கு சென்று வந்து, கொரோனா தடுப்பு பற்றி செய்தி வெளியிட்ட பல பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏராளமான நிருபர்களுக்கு கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உண்மை நிலவரம் என்ன என்பது வெளியே தெரியவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய டிடிவி தினகரனுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்களுடன் பத்திரிகையாளர்களும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல இடங்களுக்கு சென்று வந்து, கொரோனா தடுப்பு பற்றி செய்தி வெளியிட்ட பல பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏராளமான நிருபர்களுக்கு கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உண்மை நிலவரம் என்ன என்பது வெளியே தெரியவில்லை.

 

ttv-dhinakaran-01.jpg

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 பத்திரிகையாளர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிதி உதவி செய்துள்ளார். 40 பத்திரிகையாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.10 ஆயிரத்தை டிடிவி தினகரன் செலுத்தியுள்ளார். டி.டி.வி.தினகரனின் இந்த உதவிக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் அசதுல்லா நன்றி தெரிவித்துள்ளார்.