கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கறி விருந்து வைத்து அசத்திய நபர்!

 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கறி விருந்து வைத்து அசத்திய நபர்!

விருந்து வைக்க எண்ணிய துபாய் நாட்டில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த ஷேக் தாவூத் மரைக்காயர் என்னும் நபர் தனது நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்தார். 

உலகம் முழுவதும் மே மாதம் 1 ஆம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல நேற்று உழைப்பாளர் தினத்தை கொண்டாட முடியாவிட்டாலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த  மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என பலரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் மக்களை காப்பாற்ற பாடுபடும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உழைப்பாளர் தினத்தன்று விருந்து வைக்க எண்ணிய துபாய் நாட்டில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த ஷேக் தாவூத் மரைக்காயர் என்னும் நபர் தனது நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்தார். 

ttn

அதன் படி நாகைப்பட்டினத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அந்த விருந்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்ட நிலையில்,  நாகை நகராட்சி ஆணையர் யேசுராஜ் பிரியாணி பரிமாறியிருக்கிறார். இதனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வயிறார உண்டு, உணவு வழங்கிய நபருக்கு நன்றி தெரிவித்து சென்றுள்ளனர்.