கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.50 லட்சம் நிதியுதவி!

 

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.50 லட்சம் நிதியுதவி!

ரூ.50 லட்சம் நிதியுதவி தருவதாகவும் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் நேற்று காவலர் சேட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.50 லட்சம் நிதியுதவி தருவதாகவும் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ttn

அந்த அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சேர்ந்த. திரு சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். அவர் 7.5. 2020 அன்று தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரானா வைரஸ் தொற்று தொடர்புக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்னையிலிருந்து அகமதாபாத்தில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியதால் கண்டெய்னர் லாரி அங்கிருந்து தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

 அப்போது தடுப்பின் மறுபுறம் இருந்த தலைமை காவலர் திரு. சேட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பணியின் போது உயிரிழந்த தலைமை காவலர் திரு சேட்டு அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு சேட்டு அவர்களின் குடும்பத்திற்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும் அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.