கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நாளை முதல் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

 

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நாளை முதல் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுபுப்பணிகளில் காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இரவுப்பகல் பாராமல் குடும்பத்தை மறந்து பணியாற்றி வருகின்றனர். பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, போலீஸ் மற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான மாஸ்க்குகள், உரிய பாதுகாப்பு உடைகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

zinc

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு ஸிங்க் (zinc) மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஸிங்க் (zinc)மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகள் நாளைமுதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.