கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5 லட்சம் வழங்கிய விவேக்!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5 லட்சம் வழங்கிய விவேக்!

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் மொத்தமாக 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 16 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ள நிலையில்  4 லட்சத்து 35 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,240ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் 1,173 பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

Vivek

முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க, தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் விவேக் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.