கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்எல்ஏக்களின் தொகுதி நிதியில் தலா ரூ.1 கோடி பிடித்தம்!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்எல்ஏக்களின் தொகுதி நிதியில் தலா ரூ.1 கோடி பிடித்தம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு உதவியுள்ளது. அதனால் அதற்கு நிதியுதவி அளித்து உதவுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். அதே போல மத்திய அரசு, தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியில் இருந்து ரூ.500 கோடி கிடைத்துள்ளது. அதனையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி பிடித்தம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் நினைத்தால் கூடுதலாக ரூ.25 லட்சம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்யலாம்  என்றும் கூறியுள்ளார்.