கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக்கலாம் – ரஜினிகாந்த்

 

கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக்கலாம் – ரஜினிகாந்த்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க பலரும் தங்கள் கட்டிடங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, வைரமுத்து தங்கள் கட்சி அலுவலகங்கள், அரங்குகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கடிதம் வழங்கின. தற்போது நடிகர் ரஜினிகாந்தும் வைரமுத்துவும் தன்னுடைய திருமண மண்டபத்தில் தற்காலிக மையம் அமைக்க பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

ரஜினிகாந்த்

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு கொடுக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை வெள்ள பாதிப்பின் போது சுமார் 20 நாட்கள் ராகவேந்திரா மண்டபத்தில் பொது மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அங்கு தங்கியவர்களுக்கு உணவும் இலவசமாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கும் திருமண மண்டபத்தை வழங்க ரஜினிகாந்த் முன்வந்துள்ளார்.