கொரோனா எதிரொலி: தேர்வுக்கு மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம்!

 

கொரோனா எதிரொலி: தேர்வுக்கு மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுந்த சிபிஎஸ்இ அனுமதி வழங்கியுள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுந்த சிபிஎஸ்இ அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 3,100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் 28 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

Coronavirus

இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைஸர் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ அனுமதி வழங்கியுள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ  10 ஆம் வகுப்புபொதுத்தேர்வு இன்று தொடங்கி 18 ஆகிய தேதி வரை நடைபெற உள்ளது.