கொரோனா எதிரொலி: சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு!

 

கொரோனா எதிரொலி: சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு!

திட்டமிட்டபடி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா  வைரஸ்  தொற்று  உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில்  கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.  ஆனாலும்  திட்டமிட்டபடி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ttn

இந்நிலையில், கொரோனா  அச்சத்தால் சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு ஆணையம்  அறிவித்துள்ளது.  பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளும் மார்ச் 31 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.