கொரோனா எதிரொலி: ஆம்பூரில் உள்ள அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு!
Apr 13, 2020, 07:12 IST1586742133000
தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளையும் மூட வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அங்கு 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை 6 மணிமுதல் மறுஉத்தரவு வரும் வரை வங்கிகளை மூடக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.