கொரோனா உறுதியான கர்ப்பிணிக்கு கொரோனா இல்லாத ஆண் குழந்தை பிறந்தது!

 

கொரோனா உறுதியான கர்ப்பிணிக்கு கொரோனா இல்லாத ஆண் குழந்தை பிறந்தது!

ஈரோடு பெருந்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 289பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது.

babyஇந்நிலையில் ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 பேரில் இருவர் கர்ப்பிணி பெண்கள். அவர்களில் பெருந்துறையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தை பிறந்த நிலையில், தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையையும் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்குமா என்பதை கண்டறிய 3 வாரங்கள் தேவை என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.