கொரோனா அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

 

கொரோனா அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழகம் முழுவதும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவால் முதன்முதலில் ஒருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்றும் அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 

ttn

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்கள் மூலமாகவே, கொரோனா அதிகமாக பரவுகிறது என்பதால், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி தமிழகத்தில் 15,268 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில், திருச்சியில் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்