கொரோனா அச்சுறுத்தல்: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

 

கொரோனா அச்சுறுத்தல்: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டம் நாகக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரிய தற்காலிக ஆசிரியர் நேர்முக தேர்வு இன்றும் நாளையும் நடைபெறவிருந்தது.

உலகநாடுகளை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தலைகாட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 2 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

Corona Virus

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.