கொரோனா அச்சம்: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைப்பு

 

கொரோனா அச்சம்: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமராவதி: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 2 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அம்மாநிலத்தில் நகராட்சிகள் மற்றும் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும், புறநகர் பகுதிகளில் 23-ம் தேதியும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

ttn

தேர்தல் ஆணையர் என்.ரமேஷ் குமார்

ஆந்திரா மாநிலத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்கள் 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையர் என்.ரமேஷ்குமார் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.