கொரோனாவை விரட்ட சாணம் தெளித்து விளக்கேற்றிய பெண்கள்!
Mar 22, 2020, 12:56 IST1584862003000
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றில் 7 பேருக்கு உறுதிசெய்யபட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் நோக்கில் இந்தியாவில் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றில் 7 பேருக்கு உறுதிசெய்யபட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பெண்கள் மாட்டு சாணத்தால் வாசல் தெளித்து, மாட்டு கோமியத்துடன் மஞ்சள், குங்குமம் கலந்து ஒரு கலசத்தில் வைத்தும், சாணத்தின் நடுவில் விளக்கேற்றி வைத்தும் வழிபட்டுவருகின்றனர்.