கொரோனாவை தடுக்க இலவச சோப்… ராமதாஸ் ஐடியா!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தவிர்க்க ஏழைகளுக்கு இலவச சோப் வழங்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தவிர்க்க ஏழைகளுக்கு இலவச சோப் வழங்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: “மீண்டும் சொல்கிறேன். கொரோனா வைரஸ் நோயை தடுக்க பிறருடன் கைகுலுக்குவதை தவிருங்கள்; கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதும் சோப்பால் கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவுங்கள்!
1.மீண்டும் சொல்கிறேன். கொரோனா வைரஸ் நோயை தடுக்க பிறருடன் கைகுலுக்குவதை தவிருங்கள்; கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதும் சோப்பால் கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவுங்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 14, 2020
தமிழ்நாட்டில் 40% மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில் தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடமை நிதியை இதற்காக கேட்டுப் பெறலாம்!”
2.தமிழ்நாட்டில் 40% மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில் தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடமை நிதியை இதற்காக கேட்டுப் பெறலாம்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 14, 2020
;