கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் நைட்ரேட் கரைசலை குடித்தவர் உயிரிழப்பு!

 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் நைட்ரேட் கரைசலை குடித்தவர் உயிரிழப்பு!

அதனால் இவர் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். 

சென்னை தி.நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமாரின் நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன்(47. இவர் சுமார் 27 வருடங்களாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள சுஜாதா பயோ டெக் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் சளி, இருமல் உள்ளிட்டவற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. அதனால் இவர் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். 

ttn

அவரது நண்பரான டாக்டர் ராஜ்குமாருடன் இணைந்து நேற்று கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்துள்ளனர். அது முடிந்ததும், சிவநேசன் நைட்ரேட் கரைசலை குடித்துள்ளார். உடனே, சிவநேசன் மயங்கி விழ டாக்டர் ராஜேந்திரன் அவரை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், நைட்ரேட் கரைசலால் பாதிக்கப்பட்ட சிவநேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.