கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய போலி சித்தமருத்துவர் தணிகாசலம் கைது!

 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய போலி சித்தமருத்துவர் தணிகாசலம் கைது!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரப்பி வந்தார்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. அவ்வாறு வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தும், வதந்திகள் குறைந்ததாக தெரியவில்லை. 

ttn

குறிப்பாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரப்பி வந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் தகவல்கள் பரப்புவது  The Epidemic Diseases Act and Regu- lations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பி வந்த போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை சென்னை குற்றப்பிரிவு போலிசார் இன்று காலை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.