கொரோனாவுக்கு பயந்து மாஸ்க் போடுற நீங்க ஹெல்மெட் போட மாட்டுறீங்களே? கர்நாடக டிஜிபியின் அசத்தல் பதிவு!
மக்கள் அச்சத்துடன் வலம்வர தொடங்கியுள்ளனர். குறிப்பாக பலரும் மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் வலம்வர தொடங்கியுள்ளனர். குறிப்பாக பலரும் மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
Strange paradox! Isn’t it. pic.twitter.com/RtMPVGTeSJ
— DGP KARNATAKA (@DgpKarnataka) March 3, 2020
இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது டிவிட்டர் பக்கத்தில், 3 ஆயிரம் பேர் இறந்துள்ள கொரோனா வைரஸுக்காக ஒட்டுமொத்த உலகமும் மாஸ்க் அணிந்துள்ளது. ஆனால் ஆண்டுதோறும் 1.35 மில்லியன் மக்கள் சாலை விபத்தில் பலியாகி வருகின்றனர். ஆனால் இன்னும் யாரும் ஹெல்மெட் அணிய விரும்பவில்லை’ என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.