கொரோனாவுக்கு சென்னையில் மேலும் இருவர் பலி!

 

கொரோனாவுக்கு சென்னையில் மேலும் இருவர் பலி!

மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

tt

தமிழகத்தில் நேற்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 74 பேர் உயிரிழந்த நிலையில்  3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

fg

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த 44 வயது பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  உயிரிழந்தார். அதேபோல் திருமுல்லைவாயிலை சேர்ந்த 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.