கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 2 பெண்கள் பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு!

 

கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 2 பெண்கள் பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு!

சென்னையில் 3,043 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 600பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது.

tt

இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 3,043 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

tt

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.