கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 96 வயது முதியவர் உயிரிழப்பு!

 

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த  96 வயது முதியவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதனிடையே தமிழகத்தில்  நேற்று மேலும் 98 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியான  நிலையில் மொத்த பாதிப்பு 1173 ஆகவும், பலி அதிகரித்து 11 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.