கொரோனாவுக்கு எதிர்க்கட்சிகளைப் போல ஓடி ஒளியவில்லை… அமைச்சர் கடம்பூர் ராஜூ தைரியமான பேட்டி
கோவில்பட்டியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளைப் போல நாங்கள் ஓடி ஒளிந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திலகரத்னம் தீப்பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வரும் பணிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து, முககவசங்கள் கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினேன்.#Corona #TNAgainstCorona #TamilNadu pic.twitter.com/nsLUN4Bje9
— Kadambur Raju (@Kadamburrajuofl) April 22, 2020
அரசு எடுத்து வரும் நடவடிக்கை, மருத்துவர்களின் சேவை, பொது மக்களின் ஒத்துழைப்புதான் இதற்கு காரணம். நாங்கள் எதிர்க்கட்சிகளைப் போன்று கொரோனா வந்தவுடன் ஒளிந்துகொண்டோ, தலைமறைவாகவோ இல்லை. அன்றாடம் மக்களை சந்தித்து வருகிறோம். கொரோனா பற்றிய தகவலை மக்களுக்கு சொல்வதால் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது.
தி.மு.க தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அறிக்கை வெளியிடுகிறார். அம்மா உணவகம் தானாக இயங்கி வருகிறது. விலையில்லாமல் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் உள்ளதால் செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் செய்கி◌ாறம். நிர்வாகம் இல்லையே என்ற ஏக்கத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த ஏக்கம் அவருக்கு காய்ச்சலாக மாறாமல் இருந்தால் சரி” என்றார்.