கொரோனாவுக்கு எதிரான யுத்தத்துக்கு ரூ.50 கோடி வழங்கிய கோடக் மகிந்திரா வங்கி….PM CARES நிதியத்தில் குவியும் நன்கொடை

 

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்துக்கு ரூ.50 கோடி வழங்கிய கோடக் மகிந்திரா வங்கி….PM CARES நிதியத்தில் குவியும் நன்கொடை

கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு உதவும் வகையில், PM CARES நிதியத்துக்கு கோடக் மகிந்திரா வங்கியும், உதய் கோடக்கும் உடனடியாக மொத்தம் ரூ.50 கோடி வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு நாட்டு மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் இதற்காக PM CARES என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதனையடுத்து பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு நன்கொடை வாரி வழங்கி வருகின்றனர்.

கோடக் மகிந்திரா வங்கி

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகிந்திரா வங்கியும், அதன் நிர்வாக இயக்குனர் உதய் கோடக்  PM CARES நிதியத்துக்கு உடனடியாக மொத்தம் ரூ.50 வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். இது தொடர்பாக கோடக் மகிந்திரா வங்கி தனது டிவிட்டரில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் உதய் கோடக் தனிப்பட்ட முறையில் உடனடி ஆதரவாக ரூ.50 கோடி (தலா ரூ.25 கோடி) PM CARES நிதியத்துக்கு வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது என பதிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண (PM CARES) நிதியத்துக்கு நன்கொடை வழங்க ஆர்வமாக உள்ள குடிமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் pmindia.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று லான் இன் செய்து நிதியளிக்கலாம்.