கொரோனாவுக்கு இளம் ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியம் – எச்சரிக்கும் மனநல மருத்துவர் ஷாலினி!

 

கொரோனாவுக்கு இளம் ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியம் – எச்சரிக்கும் மனநல மருத்துவர் ஷாலினி!

கொரோனா வைரஸுக்கு இளம் ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என மனநல மருத்துவர் ஷாலினி கூறியுள்ளார்.

சென்னை: கொரோனா வைரஸுக்கு இளம் ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என மனநல மருத்துவர் ஷாலினி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் பலர் அதை மதிக்காமல் தேவையில்லாமல் பைக்கில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக துடிப்பான சில இளைஞர்கள் இந்த வகையான காரியங்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ttn

இந்த நிலையில், மனநல மருத்துவர் ஷாலினி இத்தகைய நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது கொரோனா வைரஸுக்கு இளம் ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் கொரோனா எனக்கு வராது என திமிரோடு திரியாதீர்கள். இனப்பெருக்கத்தை பாதிக்கும் வீரியம் கொரோனாவுக்கு உண்டு என்றும் ஷாலினி கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் இந்த நேரத்தில் கருவுற்று குழந்தை பெறுவது உகந்ததல்ல என்று அவர் தம்பதிகளை எச்சரித்துள்ளார்.