கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 பேர்.. பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்த மருத்துவக் குழு!

 

கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 பேர்.. பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்த மருத்துவக் குழு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலை வரும் என்று உறுதியுடன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில்,  நேற்று குறைந்த அளவில் அதாவது 25 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலை படிப்படியாக குறைந்து விடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். 

ttn

கொரோனா வைரஸில் இருந்து இதுவரை 100கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 44 பேரில், 3 பேர் கடந்த 4 ஆம் தேதி குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து குபேரன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் குணமடைந்துள்ளதால் அவர்களை மருத்துவக் குழுவினர் பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். குணமடைந்த அந்த 10 பேரில், 7 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.