கொரோனாவின் கோரத்தாண்டவம்.. தாராவியில் ஒருவர் பலி.. அச்சத்தில் பொதுமக்கள்!

 

கொரோனாவின் கோரத்தாண்டவம்.. தாராவியில் ஒருவர் பலி.. அச்சத்தில் பொதுமக்கள்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,965ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,965ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்தில்  இருந்து 151 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மும்பை தாராவி பகுதியில் வசித்து வந்த நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 

ttn

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசை பகுதிகளில் ஒன்று மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை தாராவி. அங்கு வசித்து வந்த 56 வயதான நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

ttn

தாராவியில், மொத்தமாக 5கி.மீ பரப்பளவில் 10லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையில் நேற்று மட்டும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.