கொரோனாவின் கோரதண்டவம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்தது!

 

கொரோனாவின் கோரதண்டவம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27  லட்சத்தை கடந்தது!

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே  3 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டிக்க மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 26 லட்சத்து  24 ஆயிரத்து 846  பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 1 லட்சத்து 83  ஆயிரத்து 120 பேர் பலியாகி  உள்ளனர் . மேலும் 7  லட்சத்து 10  ஆயிரத்து 285  பேர் குணமாகியுள்ளனர்.