கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி! – ரஜினிகாந்த் கோரிக்கை

 

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி! – ரஜினிகாந்த் கோரிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என்று கூறியுள்ளார்.