கொரோனாவால் மற்றொருவர் உயிரிழப்பு..பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

 

கொரோனாவால் மற்றொருவர் உயிரிழப்பு..பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த சிங்காரத்தோப்பை சேர்ந்த 51 வயது முதியவர் உயிரிழந்துள்ளார் என அமைத்க்கார் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ttn

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நபர் மதுரையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து இப்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 2 பேருமே முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.